தமிழகத்தை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் பால் விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார். இதையடுத்து 2014ம் ஆண்டிற்கு பிறகு இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இனி பாண்லே பாலின் விலை ரூபாய் 36 லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.