tamilnadu

img

புதுவையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு இன்று முதல் தடை

 புதுச்சேரி, ஆக. 1- புதுவையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.2) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயண சாமி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தி ருந்தது. அதேபோல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பைகள், கப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரது கூட்டம் தலை மைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வெள்ளிக்  கிழமை (ஆக. 2) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது என்றார்.