புதுச்சேரி, ஜூன் 22- புதுச்சேரி சாலைபோக்குவரத்து கழக பேருந்து வழிதடங்களை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து பிஆர்டிசி ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சாலைபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டு களாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் பேருந்துகளை கொண்டு அரசுப் பேருந்து களின் வழித்தடங்களில் இயக்குவதை உட னடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஆர்டிசி தலைமை மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சம்மேளனத்தின் நிர்வாகி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன் துவக்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் மோகன கிருஷ்ணன், நிர்வாகிகள் சேகர், வேலய்யன், பத்மநாபன், நமச்சிவாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.