சென்னை,ஜூன் 29- புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் தலை மைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு வெள்ளி யன்று (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் ஆகி யோர் இறுதிப் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமைச் செயலா ளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.தற்போதைய தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.