tamilnadu

img

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி  புதுவை சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி, ஜன.18-
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (திங்கள்கிழமை) கூடியது. இந்தகூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வேளாண் சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

;