புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர கோரி, அம்மாநில சட்டப்பேரவையில் 16-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆகியோர் மாநில அந்தஸ்து வழங்க தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, இதை தனிநபர் தீர்மானமாக இல்லாமல் அரசு தீர்மானமாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து 16-ஆவது முறையாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.