tamilnadu

img

கொள்கை இல்லாதவர்கள் தான் அடிபணிவார்கள்.... நாராயணசாமி ஆவேசம்..

புதுவை அரசுக்கு தொல்லை கொடுக்க திட்டமிட்டு கிரண் பேடியை அனுப்பி வைத் தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. துணை நிலை ஆளுநரக்கு எதிராக உண்ணாவிரதம், தர்ணா, கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரச்சாரம்என ஆளுநரை கண்டித்து நடத்தியபோராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர் களுக்கு நன்றி.

ஹரியானா மாநிலத்தில் சவுதாலா பேரனின் கட்சி 10 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். அவர்களை இழுத்து பாஜக கூட்டணியாக ஆட்சி அமைத்தனர். சில காலம் கழித்து சவுதாலா கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியின் வசப்படுத்தினர். இதே நிலைதான் நாளை ரங்கசாமிக்கு ஏற்படும். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்டலுக்கு அடிபணிவார்கள். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு துரோகம் செய்த அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியை கவிழ்த்த மதவெறி பாஜக மற்றும் அதனுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதிலிருந்து....

;