tamilnadu

img

தோழர் அசோக் விட்டுச் சென்றப் பணிகளை வேகமாக முன்னெடுப்போம்

திருநெல்வேலி, ஜூன் 12- தோழர் அசோக் விட்டுச் சென்ற பணி களை வேகமாக முன்னெடுப்போம் என திங்களன்று நெல்லை கரையிருப்பில் அசோக் நினைவிடத்தில் தோழர்கள் சூளுரைத்தனர்.  நெல்லை மாவட்ட வாலிபர் சங்க மாவட்ட பொருளாளராக செயலாற்றி வந் தவர்  தோழர் அசோக். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நெல்லை கரையிருப்பில் ரயில்வே ட்ராக் அருகில் சாதி ஆதிக்க வெறியர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் 4ஆவது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது, இதனை ஒட்டி தச்சநல்லூரை  அடுத்த கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ நகரில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மற்றும் மாதர்  சங்க  நிர்வாகிகள் தோழர்கள் ஒன்று கூடி னர். அவரது வீட்டின் அருகில் இருந்து  ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் சிங்காரவேலன் தலைமையில் பேரணியாக புறப்பட்டனர்.  

அங்குள்ள மயானத்திற்கு சென்று  அசோக்கின் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் க.ஸ்ரீ ராம், வாலிபர் சங்க  மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர்  ஆர்.மதுபால், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம். சுடலை ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.செந்தில், எல். சரவண பெரு மாள், ஆர்.முருகன், கே.மாரிசெல்வம், கிறிஸ்டோபர், செல்லத்துரை, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அருள், மாதர் சங்க நிர்வாகிகள் முத்துமாரி, மேனகா, சிபிஎம் நெல்லை தாலுகா  செய லாளர் நாராயணன்,பாளை  தாலுகா செய லாளர் முத்து சுப்பிரமணியன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேஷ், பிஎஸ்என்எல் செல்வராஜ், சமூக ஆர்வலர் முருகன் கண்ணா, தமிழர் உரிமை மீட்பு களம் நிறுவனர் லெனின் கென்னடி, அசோக்கின் குடும்பத்தார்கள், பாலசுப்ரமணியன், ராஜகுரு, முருகேசன் உட்பட ஏராள மானோர் அவரது நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அசோக்கின் நினைவிடத்தில் அசோக் விட்டுச் சென்ற பணிகளை வேக மாக முன்னெடுப்போம் என அனைத்து தலைவர்களும் பேசினர். அதோடு உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர்.