tamilnadu

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு... மாட்டு வண்டி ஓட்டி முன்னாள் முதல்வர் போராட்டம்....

புதுச்சேரி:
புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட் டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் திங்களன்று (ஜூலை 12) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, காரைக்கால் தலத்தெரு பகுதியிலிருந்து நாராயணசாமி மாட்டு வண்டியை நகர பகுதி நோக்கி ஓட்டிச் சென்றார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத் தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 130 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.65க்கும், டீசல் ரூ.53க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.350க்கும் விற்பனை செய்யப் பட்டது. மத்தியில் நரேந்திரமோடி ஆட்சியிலிருக்கும்போது கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராக இருக்கும் நிலையில், பெட் ரோல் லிட்டர் ரூ.101க்கும், டீசல் லிட்டர் ரூ.94க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.850க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது.இந்தியாவில் இருந்துதான் நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பப்படுகிறது. அங்கு லிட்டர் ரூ.70க்கு விற்கும்போது, இந்தியாவில் மட்டும் உச்சபட்ச விலை விற்பதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காய்கனி, மளிகை, வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட் களின் விலையும் கூடியுள்ளது. மோடி அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. கொரோனா தொற்று பரவலால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், மத்திய அரசின் அலட்சியப் போக்கு மக்களை பெருமளவு பாதித்துள்ளது. உடனடியாக எரிபொருள் விலையை குறைக்காவிட்டால், நரேந்திரமோடி பதவி விலக வலியுறுத்தும் கோஷத்தை முன்வைத்தும் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
====

;