tamilnadu

img

புதுவை ஜான்குமாரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி, அக். 10- இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளர் ஜான்  குமாரை ஆதரித்து சிபிஎம் வேன்  பிரச்சாரம் நடைபெற்றது.  புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம்  தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி  கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்குமா ருக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வேன் பிரச்சாரம்  நடைபெற்றது. காமராஜ் நகர் தொகுதிக் குட்பட்ட கிருஷ்ணா நகரில் துவங்கிய பிரச்சாரத்தை கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் துவக்கி வைத் தார். கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தோழர் தா.முருகன், உழ வர்கரை நகர செயலாளர் நடராஜன் ஆகி யோர் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு  பிரச்  சாரம் செய்தனர். செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமசாமி, பிரதேசக்குழு உறுப்பி னர் கலியமூர்த்தி உட்பட திரளான கட்சி ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய பிரச்சா ரம் வசந்தம் நகர், செந்தாமரை நகர், சூர்ய காந்திநகர், எழில்நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக சின்ன யன்பேட்டை, பாலாஜிநகர், மொட்டைத் தோப்பு, ஜீவாநகர், ரெயின்போ நகர்  உள்ளிட்ட பகுதிகளில்  பிரச்சாரம் நடை பெற்றது. இந்த பிரச்சாரத்தில் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினரின் அரசி யல் நையாண்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

;