tamilnadu

img

புதுச்சேரி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல்

புதுச்சேரியில் உள்ள என்.கே.சி. அரசுப் பள்ளியில் மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அப்பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அருகே உள்ள சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அங்கு படித்த சுமார் 500-க்கும் மாணவிகளை, குருசுக்குப்பம் என்.கே.சி. பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒருங்கிணைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே என்.கே.சி. பள்ளி ஆசிரியர்கள் பலர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதில் பேதம் காட்டுவதாகவும், இட வசதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து என்கேசி பள்ளி மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த வியாழக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில், இன்று காலை சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மற்றும் என்கேசி பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் போலீசார், மாணவிகளை எச்சரிப்பு விடுத்து, மாணவிகளை வீட்டு அனுப்பிவைத்தனர். இதை அடுத்து, அப்பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

;