tamilnadu

புதுவையில் 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி, ஏப்.17-புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வியாழனன்று(ஏப்.18) நடக்கிறது. இதையொட்டி, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கை:புதுவை மாநிலத்தில் வருகிற 19 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

;