tamilnadu

img

விராலிமலையை பேரூராட்சியாக தரம் உயர்த்துக! சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்

 புதுக்கோட்டை, அக்.15- 12 ஆயிரம் வாக்காளர்களுடன் வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றி யம் மற்றும் சட்டமன்றத் தொகுதி யின் தலைநகரமாகவும் உள்ள விராலிமலை ஊராட்சியை பேரூ ராட்சியாக தரம் உயர்த்த வேண்டு மென சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக் கள் கோரிக்கை மாநாடு செவ் வாய்க்கிழமையன்று விராலிமலை யில் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் சா.தோ.அருணோதயன் தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கிவைத்து மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே. பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் நிறைவுரையாற்றினார்.  மாநட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. சண்மும், சி.அன்புமணவாளன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சு.மதியழகன், ஜி.நாக ராஜன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் டி.பழனிச்சாமி, அ.சின்னை யன், என்.மகாலிங்கம், ஏ.பழனிச் சாமி, டி.இருதயராஜ் மற்றும் கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக கிளைச் செயலாளர் டி.வின்செண்ட வரவேற்க, ஒன்றி யக்குழு உறுப்பினர் சி.கண்ணுச் சாமி நன்றி கூறினார். ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் வேலை பார்த்த விராலி மலை, மாத்தூர் பகுதிகளில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக் கர் புறம்போக்கு நிலங்கள் உள்ள கறம்பக்காடு பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். காக்காகுடி ஆறு மற்றும் ராஜா ளிப்பட்டி காட்டாற்றில் தடுப்பணை கள் கட்ட வேண்டும். தொண்டை மான் நல்லூர் மற்றும் கவரப்பட்டி யில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும்.  12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வரு வாய் வட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் சட்டமன்றத் தொகுதியின் தலைநகரமாக உள்ள விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பலவகை யாக புறம்போக்குகளில் குடி யிருந்துவரும் ஏழை, எளிய மக்க ளுக்கு வகைமாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும்.  விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக பட்டா போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்ச னையை போர்க்கால அடிப்படை யில் தீர்க்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தின் வேலை நாட் களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டதில் உள்ள குறைபாடுகளை களைய வேண் டும். பழுதடைந்துள்ள சாலை களை செப்பனிட வேண்டும். போக்குவரத்து இல்லாத பல்வேறு கிராமங்களுக்கு அரசுப் பேருந்து களை இயக்க வேண்டும். மணல் குவாரி என்கிற பெயரில் வில்லாரோடை, மதானைப்பட்டி, கத்தலூர், ஆவூர் பகுதிகளில் அர சியல் ஆதிக்கத்தின் துணையோடு நடைபெறும் மணல்கொள்ளை யைத் தடுத்து நிறுத்த வேண்டும். 25-க்கும் மேற்பட்ட இனாம் கிரா மங்களில் இனாம் ஒழப்புச் சட்டத் தின்கீழ் சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு பட்டா வழங்க வேண்டும். கொடும்பார் ஏழை விவசாயிகளின் நிலத்திற்கு பட்டா கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பின்படி தொண்டை மான் நல்லூர் சத்திரம் இனாம் கிரா மத்து மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.