tamilnadu

பொன்னமராவதி கோட்டாட்சியர் திடீர் பணியிட மாற்றம்

அன்னவாசல், ஏப்.22- பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து 19ஆம் தேதி பொன்னமராவதி மற்றும் அதனைசுற்றிய 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவுபிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ்உத்தரவிட்டார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு பொன்னமராவதியில் அமைதியான சூழல் ஏற்பட்டதையடுத்து திங்களன்றுடன் அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடைஉத்தரவு முடிவடைந்தது. இந்நிலையில் இலுப்பூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சிவதாசை பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

;