புதுக்கோட்டை, ஜூலை 15- புதுக்கோட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் கீழராஜ வீதியில் சிவபாலன் என்பவ ருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரின் மாடியில் உள்ள குடோனில் பழைய பொருட்கள் இருந்ததாக கூறப்படு கிறது. இதில் திங்கள் மதியம் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்ததால் அருகே உள்ள மற்ற கடைகளு க்கும் பரவாமல் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மின் துறையி னரும் துரிதமாக செயல்பட்டு அப்பகு தியில் மின்சாரத்தை துண்டித்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.