tamilnadu

img

சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்.... புதுக்கோட்டையில் மூத்த தோழர்கள் கவுரவிப்பு...

புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியக்குழு சார்பில் கட்சி வளர்ச்சிநிதியளிப்பு மற்றும் அரசியல்விளக்கப் பொதுக்கூட்டம் அரிமளத்தில் ஞாயிற்றுக்கிழமை யன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.வி.ராமையா வரவேற்றார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார். அவரிடம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1.50 லட்சம் வழங்கப் ப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.

மூத்த தலைவர்கள் கவுரவிப்பு 
கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பெரி.குமாரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க அரங்கத்திலும்  நீண்ட காலம் பணியாற்றி தோழர்கள் எம்.ஜியாவுதீன், ஆர்.வெள்ளைச்சாமி ஆகியோரை கே.பாலபாரதி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

;