tamilnadu

img

சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கிருமிநாசினி தெளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தமிழக முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து கந்தர்வ கோட்டை அரசு பேருந்து நிலையத்தில்வியாழக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார். மேலும், கந்தர்வகோட்டை கடைவீதி மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன், ஊராட்சிமன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் ராஜா, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் ரெத்தினவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

;