புதுக்கோட்டை, அக்.31- ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் குருதாஸ் குப்தா உடல் நலக்குறைவின் காணரமாக வியாழக்கிழமையன்று இயற்கை எய்தினார். தோழரின் மறைவையொட்டி புதுக்கோட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோ டன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் வி.சிங்கமுத்து உள்ளிட்டோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.