tamilnadu

img

கந்தர்வகோட்டை தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிருந்தாகாரத்....

புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்  சனிக்கிழமையன்று  கந்தர்வகோட்டை வெள்ளைமுனியன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார்.  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்புரை யாற்றினார்.  மக்களுக்கான கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஜி.நீலமேகம், எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஏ.ராமையன், மாதர்சங்க மாநிலசெயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் பேசினர்.

பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விழுதுகள் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

;