tamilnadu

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, டிச.8-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேனிலை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலத்திற்கு தேவை யான பட்டய கணக்காளர் படிப்பு சம்பந்தமாக விழிப்பு ணர்வு நிகழ்ச்சி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலை மையில் நடைபெற்றது. அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வகனி, ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன், உதவி தலைமை ஆசிரியர் தாமரைசெல்வன் ஆகியோர் முன்னிலையில் ஆடிட்டர் கார்த்திக் பட்டய கணக்காளர் படிப்பு பற்றி மாணவ, மாணவிகளிடம் விரிவாக பேசினார்.  நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் வீரையா, ரோட்டரி வருங்கால தலைவர் ராமன்பரத்வாஜ், ரோட்டரி சாத்தையா, வள்ளியப்பன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என 450 பேர் கலந்து கொண்டு பய னுற்றனர். நிறைவாக ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறி னார்.