புதுக்கோட்டை செப்.19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் வியாழக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் 23 பேர் காயம் அடைந்தனர். மேற்பனைக்காடு மேற்கு பகுதியைச் சேர்ந்த, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் கிழக்குப் பகுதியில் வியா ழக்கிழமை வேலை செய்துள்ளனர். வேலை முடிந்து திரும்பி நடந்து சென்ற போது அவ்வழியே வந்த ஒரு சுமை ஆட்டோவை நிறுத்தி அதில் சுமார் 30 பேர் ஏறி சென்றுள்ள னர். அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விட்டது. இதில், 23 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த சந்திரா (60), த.மலர்(63), மு.மாலதி(45), ப.தேவிகா(63), செ.ஞானசுந்தரி(40), சி.தெய்வானை(65) ஆகியோரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனு மதித்திருந்தோரை ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் சந்தித்து ஆறுதல் கூறினார்.