tamilnadu

img

பள்ளியில் மாதிரி கோளரங்கம்

புதுக்கோட்டை, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சித்தன்ன வாசலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம் பாட்டுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அதில் ஒன்று வான் வெளியை ஒரு இருட்டறைக்கு அமைத்து மாண வர்களுக்கு விளக்கும் கோளரங்கம். இந்த மாதிரியை புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைத்துள்ளனர். கோளரங்கத்தின் மாதிரியை மாணவிகள் பார்வையிடும் நிகழ்ச்சி கடந்த புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொ) திருச்செல் வம் தலைமை வகித்தார். மாணவிகள், மாதிரி கோளரங்கத்தை கண்டு ரசித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரெங்கராஜூ, ஒருங்கிணைப்பாளர் மதி யழகன், உடற்கல்வி இயக்குனர் ராஜா சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.