tamilnadu

img

பீகார் : மருத்துவமனைகளில் வெள்ள நீர்

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பாட்னா மற்றும் கார்தனிபாக்கில் உள்ள மருத்துவமனைகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

;