ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்குக!
திருநெல்வேலி, செப். 6- பீடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நெல்லையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முறை யீடும் போராட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற பீடி தொழிலா ளர்கள் மற்றும் அனைத்து பென்சன் தாரர் களுக்கும் குறைந்தபட்சம் மாதம் 3000/- பென்சன் வழங்க வேண்டும், கம்யூடேசன், லோன் 100 மாதம் பென்சன் பிடித்தம் செய்த பிறகு 1000 க்கு கீழ் பென்சன் வழங்கும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டியுடன் மாதம் ரூபாய் 3000 பென்ஷன் வழங்கிட வேண்டும், ராஜினாமா, ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு பி.எப்.பணம், பென்ஷன் வழங்கிட ஆதார் இணைப்பு, பான் கார்டு, பாஸ் போர்ட், செல் நம்பர் இணைப்பு என பி.எப் அலுவலகம் ,சேவை மையம், பீடி கம்பெனிகள் அலை கழிப்பதை தடுத்து நிறுத்திடுக . ஏற்கனவே பி.எப்.அலுவலகத்தில் உள்ள சான்றிதழ்கள் மூலம் பி.எப். பணம், பென்சன் வழங்கிடுக, சிறு பிள்ளைகளுக்கு தொழிலாளர்களி டம் திருத்தம் கோரி பல வருஷம் பி.எப். அலுவலகம் பீடி கம்பெனிக ளை பெண்டிங் வைப்பதை சரி செய்து பணபலன்களை வழங்கிட கோரி இந்த போராடடம் நடை பெற்றது.
இந்த மனு கொடுத்து முறை யீடும் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ம.ராஜாங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகா விஷ்ணு,சூசை அருள் சேவியர், சண்முகம், குருசாமி, இந்திரா, கற்பகவல்லி, இசக்கிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சம்மேளன பொது செயலாளர் கே.திருச்செல்வன், சங்க மாவட்ட பொது செயலாளர் எம்..வேல்முருகன், வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் பாபு, சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் டி.காமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு பீடி தொழிலா ளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை நன்றி கூறினார்.
போராட்டத்தில் பீடி தொழிலா ளர் சங்க நிர்வாகி கே.மாரிச் செல்வம்,சி.பி.எம் அம்பை ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து 1500 பீடி தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களை முதன்மை ஆணையர் மற்றும் மண்டல ஆணை யரிடம் சி.ஐ.டி.யு தலைவர்கள் கொ டுத்தனர். மனுக்களை சரிபார்த்து ஒரு சில மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.தொடர்ந்து இது குறித்து பேசி சரி செய்து கொள்வோம் எனவும் பி.எப் அலுவலக ஆணையர்கள் உத்தரவாதமாக கூறினர். இதனை யடுத்து பீடி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.