சென்னை, நவ. 29- பொங்கல் திருநாளை சிறப் பாகக் கொண்டாட குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத் துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயல கத்தில் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள் ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக மொத்த மாக ரூ.2,363.13 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்பத்தார் அரிசி, மற்றும் சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ள னர். இதில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போர் 1.95 கோடி பேர் ஆவர். சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள் வதற்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அப்படி மாற்றிக் கொள் பவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.