tamilnadu

img

ஜன.19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை:
தமிழகம் முழுவதும் ஜனவரி 19 ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி  ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  சென்னையில் மட்டும், ஆரம்பசுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள், பேருந்து நிலையங்கள் என ஆயிரத்து 654 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டதா என ஆய்வு நடத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

;