tamilnadu

img

பெரியார் நினைவு நாள்: அமைதி ஊர்வலம்-மரியாதை

சென்னை,டிச.24- தந்தை பெரியாரின் 46 ஆம்  ஆண்டு நினைவு தினத்தை யொட்டி திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமை யில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. அண்ணா சாலை (சிம்  சன் அருகில்) உள்ள தந்தை பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிந்தாதிரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை  வழியே  அமைதி ஊர்வலமானது பெரியார்  திடலை அடைந்தது. அங்கு 21 அடி  உயர தந்தை பெரியார் முழு உருவ  சிலைபீடத்தில் மலர் மாலை  வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் துணைப் பொதுச்செய லாளர் பொறியாளர் ச.இன்பக் கனி மகளிர் சார்பில் மலர் வளை யம் வைத்தார். கவிஞர் கலி.பூங்  குன்றன், கழக பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக-சிபிஎம்-சிபிஐ

சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்க ளவை உறுப்பினர்  டி.கே.ரங்க ராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாலை அணி வித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் பெரியார் நினைவிடத்தில் மலர்  வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மதிமுக-விசிக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மல்லை சத்யா, ஜீவன் உள்ளிட்ட மதிமுக  பொறுப்பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் செல்வம் உள் ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.