tamilnadu

img

நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் எழும்பூரிலிருந்து மீண்டும் இயக்கம்

சென்னை,டிச.5- தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக கடந்த 2 மாதங்களாக தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்ட நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 4வது நடைமேடை தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை எழும்பூரிலிருந்து நெல்லை செல்லும் நெல்லை விரைவு ரயிலும்  செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.  தற்போது ரயில் நிலைய தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால், மூன்று நாட்களுக்கு முன்பாகவே நேற்றிரவு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.