tamilnadu

img

சமூக அநீதிகளுக்கு எதிராக போராடிய பி.எஸ்.கிருஷ்ணன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை,நவ.10-  சமூக அநீதிகளுக்கு எதி ராக தொடர்ந்து போராடிய வரும் பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடு பட்டவருமான பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஞாயி றன்று காலமானார்.   அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:   முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக அநீதி களுக்கு எதிராக தொடர்ந்து போராடியவருமான பி.எஸ்.கிருஷ்ணன் உடல்நிலை குறைவு காரணமாக தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலை கால மானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

1956 இல் ஐ.ஏ.எஸ். பணி யில் சேர்ந்த அவர்,  தன்னு டைய பணிக்காலத்தில், தலித்துகள், பழங்குடி கள், மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர்.  தீண்டாமையையும், சாதிய  பாகுபாடுகளையும் ஒழிப்பதற் காக பாடுபட்டவர். குறிப்பாக  பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறு திட்டம், பட்டி யல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடு மைகள் தடுப்பு) சட்டத்தை  உருவாக்க காரணமாக இருந்தவர்.  ஆட்சி முறையும், பொதுநிர்வாகமும் அடித் தட்டு மக்களை எளிதாக சென்றடைவதற்கான வழி முறைகளை வடிவமைத்த வர். 1990-ல் ஓய்வுபெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டு களாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மத சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது  இறுதி மூச்சுவரை மிகத்தீவிர மாக பாடுபட்டு வந்தவர் பி. எஸ்,கிருஷ்ணன்.  அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும் தன்னு டைய அனுதாபத்தையும்  ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;