tamilnadu

img

அனைத்து மத்திய தேர்வுகளையும் தமிழிலும் நடத்த வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 14 - ரயில்வே துறை, அஞ்சல்துறை தேர்வுகள் மட்டுமல்ல; மத்திய அரசின் அனைத்து துறை தேர்வுகளையும் தமிழி லும் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்கள வைக் குழுத் தலைவர் டி.கே.ரங்க ராஜன் வலியுறுத்தினார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தஞ்சாவூர் மாவட்ட 14வது மாநாட்டு பேரணி - பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற இப்பேரணி - பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட டி.கே.ரங்க ராஜன், முன்னதாக செய்தியாளர்களி டம் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். “அஞ்சல்துறை தேர்வு வழக்கத் திற்கு மாறாக ஆங்கிலத்திலும் இந்தி யிலும் மட்டுமே நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு, தமிழ் புறக்கணிக்கப் பட்டது அநீதியானது. கடும் கண்டனத் திற்குரியது. ரயில்வே துறை, அஞ்சல்துறை தேர்வுகள் மட்டுமல்ல; மத்திய அரசின்  அனைத்து துறை தேர்வு களையும் தமிழிலும் நடத்த வேண்டும். இக்கோரிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக மாற்று வதை உறுதிசெய்ய வேண்டும். அதற் கான போராட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட தமிழகத்திற்கு எதிரான மோடியின் தவறான கொள்கை களை அதிமுக அரசு ஆதரித்து வரு கிறது. இதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தொழிலாளர்களின் மகத்தான இயக்கமாம் சிஐடியு தொடங்கப்பட்டு 50ஆம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி சென்னையில் பொன்விழா அகில இந்திய மாநாடு 2020 துவக்கத்தில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்த டி.கே.ரங்கராஜன் எம்.பி., மோடி அரசின் நாசகர கொள்கை களை எதிர்த்து மேலும் மேலும் கூர்மை யான தொழிலாளர் வர்க்கப் போராட்டங் களை இம்மாநாடு திட்டமிடும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் சிஐடியு மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய டி.கே.ரங்கராஜன், “இரண்டாவது முறையாக மிருக பலத்துடன் மத்திய ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக, ஜனநாயகத்தை சீர்குலைக்க புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. தெலுங்குதேச எம்.பி.க்களை விலைபேசியது; கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டது; கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை பேரம்பேசி, பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து அந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கான கேடுகெட்ட குதிரைபேரத்தில் சற்றும் கூச்சநாச்சமின்றி பகி ரங்கமாகவே இறங்கியிருக்கிறது பாஜக” என்று சாடினார். மேலும், “பாஜக ஆட்சியில் நாளுக்கு நாள் வேலை யில்லா பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்வேயில் 82ஆயிரம் கலாசி பணிக்கு 4லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள். 1 லட்சம் பேர் இதர பட்டதாரிகள். ஏற்கெ னவே எண்ணற்ற பட்டதாரிகள் படிப்புக்கேற்ற வேலை யின்றி டாஸ்மாக் கடைகளிலும், ஆட்டோ ஓட்டுநராகவும், இதர பல முறைசாரா தொழில்களிலும் கூலிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என வேதனையுடன் குறிப் பிட்ட அவர், பாஜக ஆட்சியில் விவசாயிகள் பிரச்சனை தீர வில்லை; தொழிலாளர்கள் பல முனைகளிலும் பாதிக்கப் பட்டுள்ளனர்; தொழில்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன; ஜிஎஸ்டி வரியால் தமிழகத்தில் மட்டும் 50ஆயிரம் சிறு-குறு தொழில்கள், தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மறுபுறம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் பாஜக ஆட்சியில் அனைத்து வளங்களும் பெற்று பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனம் உள்பட இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் கைமாறாக பாஜகவுக்கு கோடி கோடியாக தேர்தல் நிதி யும் கட்சி நிதியும் கொட்டிக் கொடுக்கின்றனர். முற்றிலும் சட்டவிரோதமான இந்தக் காரியங்களை சட்டப்பூர்வமாக செய்துகொண்டிருக்கிறது பாஜக என்றும் சாடினார்.

இத்தகைய மக்கள்விரோத, தொழிலாளர் விரோத, விவ சாய விரோத பாஜக ஆட்சியை எதிர்த்து மக்கள் நலன்காக்க தொழிலாளர் இயக்கமே முதன்மைப் படையாக களத்தில் நிற்கிறது. அந்த படையின் பலத்தை மேலும் மேலும் வலுப்படுத்திட உழைப்போம் என்றும் டி.கே. ரங்கராஜன் எம்.பி., அறைகூவல் விடுத்தார். முன்னதாக பேரணியை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்தில் சிஐ டியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், செய லாளர் சி.ஜெயபால், வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.