tamilnadu

img

காஷ்மீரைக் காப்பது நமது கடமை -பிரகாஷ் காரத்

மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத் திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிராகவும் மின்னல்வேகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மோடி-அமித்ஷா ஆகிய இரட்டையரின் பெரும் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அறுத்தெறியப்பட்டு, அதன் துணை ஷரத்தாக இருந்த 35-ஏ பிரிவு செல்லாததாக்கப்பட்டி ருக்கிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துக்கட்டி யிருப்பதன் மூலமும் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பதன் மூலமும் மிகவும் வெட்கமற்ற முறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மக்களை அடைத்து வைத்துவிட்டு, வலுக் கட்டாயமாக, மிகவும் வஞ்சகமான முறையில் இவை செய்யப் பட்டிருக்கின்றன.அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது மிகவும் சூழ்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசடி யாகும்.

ஆகஸ்ட் 4 வரையிலும் இந்திய ஒன்றியத்தில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது ஜம்மு – காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 28ஆகக் குறைந்துவிட்டது. இத்தகைய நிகழ்வு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன்னெப் போதும் நிகழாத ஒன்று. இதன்மூலம் பாஜக அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றவோ அல்லது புதியதாக உருவாக்கவோ வேண்டுமெனில், சம்பந்தப் பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல், செய்திட முடியாது என்று உறுதியளிக்கிறது 3வது பிரிவு. ஆனால் அதற்கு மாறாக, இப்பிரிவின் மீது கூச்சநாச்சமற்ற முறையில் தாக்குதல் தொடுத்திருப்ப தையும், அதன்மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை குழி தோண்டிப் புதைத்திருப்பதையும் இதற்குமுன்பு நாம் பார்த்ததே கிடையாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்தி டும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவானது, இந்திய ஒன்றியத்தில் உள்ள இதர மாநி லங்களிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வித்தியாசமான முறையில் சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. அதன்படி அம்மாநிலமே தனக்கான அரசமைப்புச் சட்டத்தைத் தன்னுடைய அரசியல் நிர்ணயசபை மூலமாகத் தானே இயற்றிக்கொள்ளும்.  இதன்மூலமாக ஜம்மு-காஷ்மீர் மாநி லத்திற்கும், அதன் சட்டமன்றத்திற்கும் விரிவான அளவில் சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது.  அவற்றின்படி இந்திய நாடாளு மன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு ஏற்புடையதா என்று அவர்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

370ஆவது பிரிவின் பின்னணி

1947 அக்டோபர் 26 அன்று காஷ்மீர், இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பின்னணி யில்தான்,அச்சமயத்தில் அரசமைப்புச் சட்டத்தின் வரைவை உருவாக்கிக் கொண்டிருந்த இந்திய அரசியல் நிர்ணயசபை, அதில் 370ஆவது பிரிவையும் உருவாக்கி இணைத்தது. 370 ஆவது பிரிவு, இந்திய அரசுக்கும் காஷ்மீர் மக்களின் பிரதிநிதி களுக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது. காஷ்மீரியத் (Kashmiriyat) என்கிற தங்கள் சொந்த அடையாளங்களுடனேயே இந்திய ஒன்றியத்தில் வாழ்வதற்கான காஷ்மீரி மக்களின் அபிலா சைகளை அது உள்ளடக்கி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தியா என்ற நாடு ஒன்று முஸ்லிம் நாடாகவும் மற்றொன்று மதச்சார்பற்ற நாடாகவும் துண்டாடப்பட்டசமயத்தில், பெரும் பான்மையினர் முஸ்லிம்களாக உள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணை வதை நிராகரித்துவிட்டு, மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்ததேயாகும். நாடு பிளவுண்டபோது, வட மேற்கு இந்தியா கலவரங்களால் பாதிக்கப்பட்ட சமயத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தின் புகலிடமாகத் திகழ்ந்தது.

படிப்படியாக சீர்குலைக்கப்பட்ட 370ஆவது பிரிவு 

1953க்குப்பின் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருந்த சுயாட்சியை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் நடவடிக்கை களில் இறங்கின. 1954இல் ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபின்னர், 2010 வரையிலும் 42 உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து அம்மாநிலத்தில் தலையிட்டிருக்கிறது. இவை, 370ஆவது பிரிவு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் இருந்த காஷ்மீர் நிலை மையிலிருந்து மிகவும் விரிவான அளவிற்கு மத்திய ஆட்சியா ளர்களின் தலையீட்டை அதிகப்படுத்தியது. மத்திய ஆட்சி யாளர்கள் அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின் உண்மையான சாரத்தை எப்படியெல்லாம் உருக் குலைத்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள் என்பதை சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரனி அவர்கள் மிகவும் செம்மையாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இயற்றப்பட்ட 97 சட்டங்களில், 94 சட்டங்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் பிரயோ கிக்கக் கூடியவைகளாகும்.

அந்நியப்படும் மக்களும் தலைதூக்கும் தீவிரவாதமும்

காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் படிப்படியாக நசுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங் கங்கள் கவிழ்க்கப்பட்டன. தேர்தல்கள் மத்திய ஆட்சியாளர்க ளின் ஆசிர்வாதத்துடன் வெளிப்படையாகவே மோசடியாக நடத்தப்பட்டன. இதனை 1987 தேர்தலில் அப்பட்டமாகவே காண முடிந்தது. இந்தப் பின்னணியில்தான் அங்கே மக்கள் அந்நியப்படுவதற்கான அடையாளங்கள் வளர்ந்தன. இது பலரை தீவிரவாதத்தின் பக்கமும், விடுதலை (‘Azadi’) என்னும் முழக்கத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொள்வ தற்கும் தள்ளியது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி உணர்வை, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளும், பின்னர் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கர வாத குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கின.

ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டது இந்துத்துவாவின் சூழ்ச்சியே!

 எல்லைகளுக்கு அப்பாலிருக்கின்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் விரும்புவதைப்போலவே, இந்துத்துவா சக்திகளும், ஆர்எஸ்எஸ்சும், மத அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்திடவே விரும்பி இருக்கிறார்கள்.  காஷ்மீரின் வரலாறு நெடுகிலும் இந்துத் துவாவாதிகள் இதைத்தான் செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஜம்முவைத் தனியா கவும், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக் கைத் தனியாகவும், புத்த மதப் பற்றாளர்கள் சற்றே பெரும் பான்மையுடன் இருக்கின்ற லடாக் பகுதியைத் தனியாகவும் பிரிக்கவே விரும்பினார்கள். இம்மூன்று பிரிவினரும் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆட்சியாளர்களுக்கு வெறுக்கத் தக்க ஒன்றாகவே இருந்து வந்தது. ஆர்எஸ்எஸ்-பாஜகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் நன்கு வளர்வதற்கான மண் என்றே நம்பின. ஏனெனில் அங்கே உள்ள மக்களின் மதச் சேர்மானம் அப்படி இருப்பதாக அவை கருதின. ஆர்எஸ்எஸ்- பாஜகவிடம் ஊறிப்போயிருக்கின்ற முஸ்லிம் எதிர்ப்பு கண்ணோட்டமானது, காஷ்மீர் மக்களுக்கு எவ்வித மான ஜனநாயக உரிமைகளையும் அளிப்பதற்கு எதிரான விதத்திலேயே அமைந்திருந்தது. 370ஆவது பிரிவை ரத்து செய்வதை அவர்கள் நியாயப்படுத்தியதற்குக் காரணம், அதன்பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத் தங்க ளுடைய ராணுவத்தின் மூலம் நசுக்கிவிடலாம் என்பதே யாகும்.  

 ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி-அமித் ஷா இரட்டையரைப் பொறுத்தவரை, காஷ்மீர் என்பது அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், அங்குள்ள மக்களோ முஸ்லிம்களாக இருப்பதால் அந்நியர்களாகக் கருதப்பட வேண்டியவர்களாவார்கள். ஜம்மு மக்களுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையே மதவேற்றுமையை அதிகப்படுத்திட ஆர்எஸ்எஸ்- பாஜக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் இதற்கான முயற்சி களில் வெறித்தனம் அதிகரித்தது. மக்களின் ஜனநாயக உரி மைகளுக்கான கிளர்ச்சிகள் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் மூலம் மிகவும் கொடூரமாக நசுக்கப்பட்டன. சாமானிய மக்களை தீவிரவாதிகளைப் போலக் கருதி அவர்கள்மீது ராணுவம்/துணை ராணுவப் படை யினரை ஏவித் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்தன. அனைத்துவிதமான அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நிரா கரித்திடும் போக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றது. கடந்த சில ஆண்டு களாக உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது என்பது அதிகரித்தவண்ணம் இருக்கிறது.   இதன் காரணமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்படுவது என்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டி ருக்கின்றது.

அமைதி இல்லையேல் வளர்ச்சி இல்லை
370ஆவது பிரிவை ரத்துசெய்வதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த வாதங்கள், இந்துத்துவா முகாம்களில் அடிக்கடிக் கூறப்படும் பட்டுத்தேய்ந்த பழகிப்போன வாதங்களேயாகும். 370ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியா வுடன் இணைப்பதற்குத் தடையாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார். உண்மையில், காஷ்மீர் மக்கள், அவர்க ளுக்கு இந்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளின் அடிப்படையில் விரும்பியேதான் இந்திய ஒன்றியத்துடன் சேர்ந்தார்கள்.   இந்த உறுதிமொழிகள் பின்னர் 370ஆவது பிரிவில் சேர்க்கப்பட்டன. இவ்வாறு காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவுடன் இணைவதற்கு அரச மைப்புச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அமித்ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊட்டி வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால், காஷ்மீர் மக்க ளுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சிக்கான உறுதிமொழிகள் அரிக்கப்பட்டதன் விளைவாகவே அம்மக்கள் மத்தியில் அதிருப்தியும் இந்தியாவிடமிருந்து அந்நியப்படும் சிந்தனையும் அதிகரித்து, அவை பிரிவினை வாதம் தலைதூக்குவதற்கும், பாகிஸ்தான் உதவியுடனும் உடந்தையாக இருப்பதன் மூலமும் பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றன.  அம்மாநிலத்தில் சுயாட்சி யையும் மறுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தையும் மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அவர்கள் மேலும் அந்நிய மாகாமல் தடுக்க முடியும். 

அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சியின்மைக்கும், (development) பொருளாதார வளர்ச்சி (economic growth) இன்மைக்கும்  370ஆவது பிரிவையே குற்றம் சாட்டி இருக்கி றார். கடந்த முப்பதாண்டுகளாக அம்மாநிலத்தில் தலை தூக்கிய தீவிரவாதமும், அதையொட்டிய சூழ்நிலைமையும்தான் வளர்ச்சிப்பணிகளையும், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக் களையும் முடக்கின. அங்கே ஓர் அரசியல் தீர்வினைக் கண்டு, அமைதியையும் இயல்புவாழ்க்கையையும் திரும்பக் கொண்டுவராமல், அமித் ஷா கூறுவதுபோல் அங்கே வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தனியார் முதலீடு பெரிய அளவிற்கு வந்துவிடும் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவேயாகும். இறுதியாக, அமித்ஷா, மாநிலத்தில் மிகவும் விரிவான அள விற்கு ஊழலும் பொது நிதி சூறையாடலும் ஏற்பட்டிருப்ப தற்கும் 370ஆவது பிரிவைக் குறை கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் ஊழல் தலைவிரித்தாடு வதும், கூலிக்கு மாரடிக்கும் நிர்வாகம் இருப்பதும் உண்மை தான். ஆனால் இதற்குக் காரணம் என்ன? அங்கே சரியான முறையில் ஜனநாயக நடைமுறைகள் இல்லாததும், நிர்வாகத்தினர் தங்களுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற நிர்வாக அமைப்புமுறை மிகவும் பலவீனமாக இருப்பதுமேயாகும். ஜம்மு-காஷ்மீர் வெகு காலமாகவே போலீஸ் மற்றும் ராணுவப்படை ராஜியமாகவே(police state) இருந்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில் சுமார் பத்தாண்டு காலம் மத்திய  ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. எனவே, அம்மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்குக் காரணம், மத்திய அரசின் கீழான அதிகாரவர்க்கமும், பாதுகாப்புத்துறை நிர்வாகமும் அவர்களுக்கு உடந்தையாயிருக்கின்ற அரசியல்வாதி களுமே ஆவர். 

மோடி அரசாங்கத்தின் போலி வாதங்கள்  

அரசமைப்புச் சட்டத்தின் மற்றுமொரு பிரிவை – அதாவது 367ஆவது பிரிவை – மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் உத்தரவு ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாற்றியமைத்த பின்னர், அது 370ஆவது பிரிவின் சாரத்தை நீக்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டி ருக்கிறது. இத்தகையதொரு ஏற்பாட்டின்படி, மாநில சட்ட மன்றத்தின் இசைவு பெறவேண்டும் என்பது ஆளுநரால் பறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இப்போது இருந்து வருகிறது. ஆளும் கட்சியினரின் சூழ்ச்சித்தந்திரங்களும், எதிர்க்கட்சி யினரை மிரட்டிப் பணியவைக்கிற மோடி அரசாங்கத்தின் அதிகாரங்களும் இதில் நன்கு செயல்பட்டிருக்கின்றன. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர்சிபி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பல கட்சிகள், தங்கள் தலையில் மண்ணைவாரி போட்டுக் கொண்டார்கள். ‘தன்னு டைய காலை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியையே பயன்படுத்தியதைப்போல’ என்கிற இந்தி பழமொழியையே இவர்களின் செய்கை காட்டுகிறது. காஷ்மீரில் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியை அங்கே அளிக்காமல் அதனை அரித்து வீழ்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.  நாடாளுமன்றத்தில் பாஜகவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான முறையில் அக்கட்சியால் எதிர்ப்பினைப் பதிவு செய்திட முடியாமல் போனதற்கு அது ஒரு காரணமாகும்.  

நீண்ட போராட்டம்  எதிர்நோக்கி இருக்கிறது

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கும் இந்தச் சட்டமுன் வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதற்கும் எதிராக நீதித்துறை யில் மேல்முறையீடுகள் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிக ளுக்குத் துரோகம் இழைத்ததற்கு எதிராக நீண்ட போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் ஜம்மு-காஷ்மீருக்கானது மட்டும் அல்ல. நாட்டின் ஜனநா யகத்தைப் பாதுகாத்திடுவதற்காகவும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரு போராட்டமுமாகும்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியைப் பாது காத்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கி றது. சுயாட்சியை அளிப்பதற்கான அதிகாரங்களையும், 370ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களையும் அரித்து வீழ்த்திவந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில் அதிக பட்ச சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும், மேலும் அம்மாநிலத்தின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி களுக்கும் தனித்தனியே பிராந்திய அளவிலான சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறது. தீவிரவாதிகளின் ஆயுத வன்முறைகளையும், எல்லை  தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடித்திட வேண்டும் கூறுகிற அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநிலத்தில் இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து வந்திருக்கிறது.

பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, மக்களில் சில பிரிவினர் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் எழுந்துள்ள பிரச்சனைக்கு முடிவு கட்டுவதற்கான உறுதி யான வழி இது என்று அவர்களால் பார்க்கப்படுகிறது. மோடி  அரசாங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமான முறையில் பிரச்சாரம் இப்படித்தான் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்து மக்கள் முன் வைக்கப்படவில்லை. இந்தப் பணியை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் தான் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பர்ய கலாச்சா ரத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தை, இந்துத்துவா எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடனும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும் இணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


 


 

;