tamilnadu

img

தோழர் அசோக் நினைவிடத்தில் வீரவணக்கம்....

திருநெல்வேலி:
நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மறைந்த முன்னாள் மாவட்ட பொருளாளர் அசோக்கின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை கரையிருப்பில் உள்ளஅவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள்மாவட்ட பொருளாளராக செயலாற்றியவர் தோழர் வி.அசோக், இவர்கடந்த 2019 ஆம் ஆண்டு சாதிவெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், அவரின் நினைவு தினமான ஜூன் 12 (சனிக்கிழமை) அன்று அவரது சொந்த ஊரான தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மலர்வளையம் வைத்து மறைந்ததோழர் அசோக்கின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், எம்.சுடலை ராஜ், ராஜகுருமற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் குழந்தைவேல், பேரின்பராஜ், எஸ்.கே.செந்தில், டி.நாராயணன், முருகேசன், மாறவர்மன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பீட்டர் மற்றும் மறைந்த அசோக்கின் குடும்பத்தார்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த தோழர் அசோக்கின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ஊரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

;