tamilnadu

img

நெல்லையில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா....

திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 217 பேருக்கு தொற்று உறுதியாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இந்தமாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் 100-ஐ கடந்து வந்த பாதிப்பு திங்கட்கிழமை 81 ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 217 பேருக்கு தொற்று உறுதியாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.இதில் மாநகர பகுதியில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாளையில் 25 பேர், வள்ளியூரில் 20 பேர், மானூரில் 19 பேர்  உள்பட
மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.தினசரி பாதிப்பில் மாநகர பகுதியிலேயே 50 சதவீத தொற்றுஉறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.புதிதாக பாதிக்கப்பட்ட வர்களில் தச்சநல்லூரை சேர்ந்த ஒரு டாக்டர், என்.ஜி.ஓ காலனி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பெண் டாக்டர்கள், நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர்,பெருமாள் புரம், வண்ணார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த தம்பதிகள் அடங்குவர்.ராதாபுரம், தச்சநல்லூரில் ஒரே தெருவில் 4 பேர், கங்கை கொண்டான், மேலக்கல்லூர், திருப்பணிகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் ஒரே குடும்பத்தில் 3 பேர், ராமையன்பட்டி, மூலக்கரைப்பட்டியில் ஒரே குடும்பத்தில் 2 பேர், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 போலீசார், கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த ஊழியர், மேலப்பாளையம் அரசு மருத்துவமனை ஊழியர், பாளை சிறைத்துறை குடியிருப்பில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மாநகரில் பெண் உள்பட 3 பேருக்கு மீண்டும்தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. நெல்லை அரசு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை 1,404 பேருக்கு மாதிரிகள்பரிசோதனை செய்யப்பட்டுள் ளது. இது திங்கட்கிழமை  விட சுமார் ஆயிரம் அதிகமாகும். இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,240 ஆகஅதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை 16,022 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 1,001 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

;