உதகை, டிச. 1- குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பழைய மருத்து வமனை பகுதியில் அமைந்துள்ள பாலம் இடியும் நிலையில் உள்ளதால் அதை சரிசெய்ய வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய மருத்துவமனை பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வர அப்பகுதியில் உள்ள பாலம் பயன்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடியும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக அவ்வழியே செல்லும் பொது மக்களும், பள்ளி குழந்தைகளும் விபத்து ஏற்படுமோ என்று கடும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாலத்தை பார்வையிட்டு சென்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.