திருத்தி அமைக்கப்பட்ட மறு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு செப். 19-க்குள் புகார் தெரிவிக்கலாம்
உதகை, செப்.14- நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான புகார் மற்றும் கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் வரும் செப்.19 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவல ருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, நீலகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவ டிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டு வரும் 25 ஆம் தேதி வரை நடக்கிறது. தற் போது நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிக ளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் மேற் கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்குச் சாவடிக ளில் பட்டியல் உதகையில் மாவட்ட ஆட் சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட் சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், நக ராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணைகளோ அல்லது கருத்துக்களோ இருப்பின் மாவட்ட ஆட்சி யருக்கு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக் குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது
பொள்ளாச்சி, செப்.14- பொள்ளாச்சி, மீன்கரை சாலையைச் சேர்ந்தவர் பக்திராஜ் (65), பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டி ருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் தெரிவித்தார். இதை யடுத்து, விசாரணை நடத் திய மகளிர் காவல்துறை யினர் போக்ஸோ சட்டத் தின் கீழ் பக்திராஜைக் கைது செய்தனர்.