உதகை, டிச. 11- உதகையில் சாலையிலே வாகனத்தை நிறுத்தி சென்ற வர்களின் வாகனங்களுக்கு பூட்டு பூட்டி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை, புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. அதேபோல் இவ்வழியாக தொட்டபெட்டா காட்சி முனையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் செல் வார்கள். மேலும் இந்த சாலையின் வழியாக பல கிராமங் களுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இச்சாலையில் அந்தோணியார் தேவாலயம் முன்பு தொட்ட பெட்டா வழியாக செல்லும் பயணிகளுக்காக பேருந்து நிறுத்தமும் உள்ளது. புதனன்று இந்த பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களின் சக்கரத்தில் பூட்டு பூட்டினர். பின்பு அந்த வாகன உரிமையாளர்கள் அப ராதம் செலுத்திய பிறகே விடுவித்தனர்.