tamilnadu

img

சிபிஎம் நீலகிரி மாவட்ட மூத்த தலைவர் தோழர் பெ. தமிழ்மணி காலமானார்.....

நீலகிரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டத்தின் மூத்த தலைவர் தோழர்பெ.தமிழ்மணி(73) செவ்வாயன்று(08-06-2021) அதிகாலையில் காலமானார். எளிய தோட்டத் தொழிலாளியாக இலங்கையில் துவங்கிய அவரது வாழ்க்கைநீலகிரி மாவட்டத்தின் தோட்டத்தொழிலாளர்கள், தாயகம் திரும்பிய உழைப்பாளி மக்களின்  முன்னேற்ற த்திற்கு பல்வேறு வகைகளில் பெரும் உந்து சக்தியாக இருந்தது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும், விவசாயிகள் கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதிலும், சேரங்கோடு ஊராட்சி தலைவராக அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலுமாக சிறப்பானதொரு பங்களிப்பை தனது இறுதி நாட்கள் வரையிலும் நிறைவேற்றினார். ஊராட்சி தலைவராக பொறுப்பில் இருந்த போது உதவிகள்கேட்டு வரும் அனைத்து தரப்பு மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் இன்முகத்தோடு நிறைவேற்றி தந்ததால், மக்கள் அவர்மீதான பெரும் அபிமானம்கொண்டிருந்தனர்.கூடலூர் பகுதி மக்களின் நில உரிமைக்கான தொடர் போராட்டங்களிலும், தாயகம்திரும்பியோருக்கான வாழ்வாதார கோரிக்கைகளுக்கான இயக்கங்களிலும் முன்னணி பாத்திரம் வகித்த தோழர் பெ.தமிழ்மணியின் மறைவு நீலகிரி மாவட்ட உழைப்பாளி மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு கட்சியின் மாவட்டக்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைதெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் என கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு கூறியுள்ளது.

தலைவர்கள் அஞ்சலி
அவரது இறுதி நிகழ்ச்சி எருமாடு கள்ளிச்சால் பகுதியில்  உள்ள அவரது வீட்டில் நடந்தது. இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், எருமாடு பகுதிக்குழு செயலாளர் கே.ராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.யோஹண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சந்திரபோஸ், சிபிஎம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஹனீபா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஹமீது மாஸ்டர், வர்கீஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்
தோழர் டி.தமிழ்மணி மறைவிற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி, கேரள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சசீந்திரன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் க.சகாதேவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;