1894 - பிரெஞ்சு ராணுவ அலுவலரான ஆல்ஃப்ரட் ட்ரேஃபுசுக்கு தேசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக அளவில் அநீதியின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிற ‘ட்ரேஃபுஸ் விவகாரம்’ தொடங்கியது. யூதப் பின்னணி கொண்டவர் என்ற ஒரே காரணத்தால், பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையால் கைப்பற்றப்பட்ட, ஜெர்மனிக்கு ராணுவ ரகசியங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு கடி தத்தில் காணப்பட்ட கையெழுத்து(ஒப்பம் அல்ல), ட்ரேஃபுஸ் எழுது வதைப் போலிருந்தது என்று குறிப்பிட்டு, அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது. யூதர் ஒருவர் பிரான்சைக் காட்டிக்கொடுத்தார் என்று, இது பிரான்ஸ் முழுவதும் யூத எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்படுத்தியதுடன், பல இடங்களில் யூதர்கள் கொலையும் செய்யப் பட்டனர்.
ட்ரேஃபுசின் சகோதரர் முயற்சியில், ஜார்ஜஸ் பிக்வார்ட் என்ற ராணுவ அலுவலர், உண்மையான குற்றவாளி பெர்டினாண்ட் எஸ்ட்டர்ஹசி என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தாலும், தீர்ப்பை மாற்ற ராணுவம் மறுத்துவிட்டது. எமிலி ஸோலா என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், ட்ரேஃபுசுக்கு நீதிகேட்கும் ஜே- அக்யூஸ் என்ற திறந்த மடலை குடியரசுத்தலைவருக்கு எழுத, பிரச்சனை தீவிரமடைந்தது. இதைத் தொடர்ந்து, எஸ்ட்டர்ஹசி ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதுடன், மீசையை மழித்துக்கொண்டு, இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். தீர்ப்பு தவ றென்று பிரெஞ்சு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, மற்றொரு விசாரணை நடத்திய ராணுவம், மீண்டும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தாலும், எதிர்ப்புகளால் முன்பிருந்த சாத்தானின் தீவுக்கு அனுப்பப்படவில்லை. 1906இல் அவர் நிரபராதி என்று மாற்றவியலாத தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்க, மீண்டும் ராணு வத்தில் மேஜர் பணி அவருக்கு வழங்கப்பட்டு, முதல் உலகப்போரி லும் அவர் பணியாற்றினார். ட்ரேஃபுசுக்கு ஆதவானவர்களை இண்ட லக்சுவல் என்று, எதிர்த்தவர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்தே, லத்தீன் இண்டலெக்சுவாலிஸ் என்பதிலிருந்து உருவான பழைய பிரெஞ்சுச் சொல்லான அது தற்காலப் பயன்பாட்டுக்கு வந்து, பின்னாளில் நேர்மறை பொருளும் பெற்றது. ஸோலாவின் கடிதத்தைத் தொடர்ந்து ‘தி அஃபேர்’ என்றாலே ‘ட்ரேஃபுஸ் அஃபேர்’ என்றாகிய இவ்விவ காரம், மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின்மீதான நம்பகத்தன்மையை நொறுக்கியது. ஜியோனிசத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவ ரான தியோடார் ஹெர்சலுக்கு, யூதர்கள் ஐரோப்பாவைவிட்டு வெளி யேற வேண்டும், அவர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றவும் இந்நிகழ்வே காரணமாகியதுடன், ஊடகம் (அச்சு), மக்கள் கருத்து ஆகியவற்றின் பலமும் இந்நிகழ்வில் வெளிப்பட்டது.