tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.12- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் சிவராசு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்த தாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட னடியாக அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு செய்து  அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் துளசி, சட்டக் கல்லூரி கிளை துணை செயலாளர் குணா, கிளை உறுப்பினர்கள் தீனா, பர மேஸ்வரன், கிருஷ்ணா, தண்டபாணி, ஈவெர கல்லூரி கிளை செயலாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அவர்கள், கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆட்சி யரிடம் மனு கொடுக்க வந்தனர்.

;