tamilnadu

img

நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமியை எந்தவொரு காரணமுமின்றி  தஞ்சை மாவட்ட காவல் துறை கைது செய்தனர்...

காலை 8 மணி முதல் போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு காவல் வாகனத்திலேயே வைத்திருந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பல்கலைக்கழகத்தின் மாணவரையே கைது செய்திருப்பது மாணவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது...

இதனை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,அதன் ஒரு பகுதியாக நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.