நாமக்கல், ஜூன் 9- தமிழக மின்வாரியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்தவர்கள் 2 ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்றும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியா ளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தான் தமிழக மின்வாரியத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த 36 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 2 ஆண்டு களுக்குள் தமிழ் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் பணியை இழக்க நேரி டும். இதுதான் சட்ட விதிமுறை ஆகும். தமிழகத்தில் கோடை காலத்தில் 16,500 மெகா வாட் மின்சாரம் தேவை என எதிர்பார்த்தோம். ஆனால் 16 ஆயிரத்து 100 மெகாவாட் மட்டுமே மின்சாரம் தேவைப் பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள், மின்மாற்றி கள் பழுதாகின. இதனால் ஆங்காங்கே சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இவற்றை மின்வாரிய ஊழி யர்கள் உடனடியாக சரிசெய்து விட்டனர். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.