tamilnadu

img

நாமக்கல் அருகே சுவர் இடிந்து விபத்து: 3 பேர் பலி

நாமக்கல் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்  மாவட்டம் எர்ணாபுரத்தையடுத்த  கணக்கத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி மல்லிகா இவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் மேல்பகுதியில் இருந்த ஓடுகளை நீக்கி விட்டு சுவரை இடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூங்கொடி மற்றும் அவரது பேத்தி மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் மீது சுவர் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;