tamilnadu

img

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்.

நாகை : நாகை மாவட்டம் , கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் , திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கலைச்செல்வன் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.

கடந்த 28 ம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த வேலையில் , எதிர்பாராத வேளையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் , மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் விசைப்படகில் அங்கங்கே மறைந்து கொண்டனர் . இந்த தாக்குதலின் போது படகிலிருந்த கலைச்செல்வன் என்பவரின் தலையில் துப்பாக்கியின் குண்டு உரசிச் சென்றது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார் . காயமடைந்த மீனவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

 தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ . அருண் தம்புராஜ் , நேரில் சென்று ஆறுதல் கூறினார் . மேலும் , இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்புவதாகவும் கூறினார் . ஒரு வருடங்களாக இல்லாமல் மீண்டும் தற்போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது நாகை மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

;