687 நாட்களுக்கு பிறகு நாகை - திருச்சி இடையே மீண்டும் இரயில் சேவை தொடங்கியது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி இரயில்வே, 687 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரயில் சேவை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
மேலும் இரயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். அதனைதொடர்ந்து இந்த இரயில் சிறப்பு விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது. இதனால் இதில் பயணம் செய்வதற்கான பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாகையில் இருந்து திருச்சிக்கு செல்ல 30 ரூபாய் பயண கட்டணம் இருந்த நிலையில் தற்சமயம் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.