tamilnadu

img

மாணவர்களுக்கு  தொழிற் பயிற்சி சான்றிதழ்

மயிலாடுதுறை, நவ.9- ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை மூலம் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 10 அல்லது 12-ம் வகுப்பு படித்து விட்டு மேற்கொண்டு படிப்பை தொடராதவர்கள் மற்றும் இளங்கலை வரை படித்தவர்கள் ஆகியோர் வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை மூலம் மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த 65 மாணவ- மாணவிகளுக்கு டிரெயினிங் அசோசியேட், பிரண்ட் ஆபிஸ் பயிற்சியாளர், சில்லரை வணிக மேலாளர் அகிய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு நேரடி கள பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில் தேர்ச்சியடைந்த 62 மாணவர்களுக்கு முதல்வர் டாக்டர் சி.சுந்தர்ராஜ், டீன்(கல்வி) டாக்டர் ஜி. பிரதீப், மேலாண்மை துறை இயக்குநர் டாக்டர் ஜி. ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலையில் கல்லூரியின் செயலர் கி.கார்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.