tamilnadu

img

நதிபோல் ஓடும் சாக்கடை நீர்

தரங்கம்பாடி, நவ.19- நாகை மாவட்டம், மயி லாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு 42 கோடி மதிப் பீட்டில் ஊழலுடன் செயல் படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக நகர சாலைகள் ஒன்றுகூட மிச்சமின்றி பெரும் பள்ளத் தோடு உள்வாங்கிக் கொண்டு சாக்கடை நீர் வீதியெங்கும் நதி போன்று ஓடி வருகிறது. இதனால் நகரவாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி நாள்தோறும் சிரமத்தை அனு பவித்து வருகின்றனர். டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் மக்களை வாட்டி வதைக்கிறது. திரும்பும் திசையெல்லாம் குப்பை மேடுகள், நகரம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் மட்டுமின்றி போக்குவரத்து வசதியும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டதால் வெளியூர்களிலி ருந்து வருபவர்களும் அலு த்து போய் செல்லும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.
நடைபயணம்
மக்கள் வசிக்க தகுதி யில்லா நகராக மாறி வரும் மயிலாடுதுறையின் பாதாள சாக்கடைக்கு உடனடியாக நிரந்தர தீர்வுக்கான வலி யுறுத்தியும், மக்கள் நல னுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி யினர் கடந்த 5 ஆம் தேதியி லிருந்து 11 வரை நகரம் முழுவதும் வீடு, வீடாக சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியதோடு 12,13 ஆகிய தேதிகளில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் 500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற நடைபயண போராட்டத்தை கட்சியின் வட்டச் செயலாளர் சி.மேகநாதன் தலைமையில் மயிலாடுதுறை மேம்பாலம் பகுதியிலிருந்து துவங்கி யது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி நடைபய ணத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், பி.மாரி யப்பன் மற்றும் மாவட்ட, வட்டக்குழு உறுப்பினர்கள் நடைபயணத்தில் பங்கேற்ற னர். காவிரி நகர், பூக்கடைத் தெரு, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக முழக் கங்களை எழுப்பியவாறு வந்து நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நாகை மாலி உள்ளிட்ட தலை வர்கள் கண்டன உரையாற்றி னர். நிரந்தர தீர்வினை உட னடியாக எடுக்கவில்லை யெனில் போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும் என தெரிவித்தனர்.