tamilnadu

img

தேசிய நூலக வார விழா

மணலூர்பேட்டை, நவ. 21- மணலூர்பேட்டை நூலகத்தில் நடை பெற்ற தேசிய நூலக வார விழாவில் குழந்தை களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்  என மாவட்ட காவல் துணைக் கண்கா ணிப்பாளர் ஏ.மகேஷ் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட குழுத்தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை  வகித்தார். மணலூர்ப்பேட்டை காவல் உதவி  ஆய்வாளர் மு.அன்பழகன், முதுகலை ஆசிரி யர் அரிமா தா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். திருக்கோவிலூர் வாசகர் வட்ட குழுத்தலைவர் கவிமாமணி சிங்கார உதியன்  தொடக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்ற மாவட்ட துணைக் கண்கா ணிப்பாளர் ஏ.மகேஷ்  தமிழ்நாடு அரசு  பொது நூலகத்துறை சார்பில் வழங்கப்பட்ட  1062 புதிய நூல்களின் புத்தக கண்காட்சியை  துவக்கிவைத்து நூலகப் புரவலர்களுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கி சிறப்புரை யாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற  குத்தகைதாரர்  நா.பெரியான், எம்.ஜி.கண்  ணன் ஆகியோர் தலா ரூபாய் 1000 செலுத்தி நூலகப் புரவலர்களாக இணைந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.எஸ்.நடராஜன் நூலக பயன்பாட்டிற்கு நூல் அடுக்கினை நன்கொடையாக வழங்கினார். நூலகப் புரவலர்கள் சா.மணிகண்டன், ஆதிமூலம், மா.தம்பிதுரை, ரமேஷ் சந்த்ஜெயின், அலமேலு, ம.வெங்கடேசன், சிவராமன், இரா.மணிகண்டன், சக்கரை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். நூலகப் பணி யாளர் மு.கோவிந்தன் நன்றி கூறினார்.