tamilnadu

img

திருக்களாச்சேரியில் மதங்களை கடந்த பொங்கல் விழா...

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள திருக்களாச்சேரிஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்க பொங்கலிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ எனமுழக்கமிட்ட சத்தம் மதவெறி பிடித்தவர்களுக்கு வயிற்றெரிச்சலை நிச்சயம்வரவழைத்திருக்கும்.

இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபீக் தலைமை வகித்தார்.  நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதாமுருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். 100-க்கும் மேற்பட்ட பெண்கள்  பொங்கலிட்டனர்.மேலும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும்பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் ராபிய நர்கீஸ் பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமிர்த. விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

;