tamilnadu

img

நாகை மாலிக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த மாதர் சங்கம்....

நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றப் பணியாற்ற போகும் நாகைமாலிக்கு மாதர் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று கீழ்வேளூர் தொகுதி மக்களுக்காகவும் உழைப்பாளி வர்க்கத்திற்கும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பதற்கு நாகைமாலி வெற்றி பெற்றார் என்ற மகிழ்ச்சியான செய்தி மக்கள் மனங்களிலும் இல்லங்களிலும் பரவியுள்ளது.

வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள சகோதர அமைப்புகளின் தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என நாகைமாலியை நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். பெருந்தொற்று காலம் என்பதால் தற்போது மக்களை சந்திக்க முடியவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் பெருகும் வரவேற்பு சிபிஎம் நாகை மாவட்ட அலுவலகத்தில் விழா கோலம் பூண்டுள்ளது.செவ்வாயன்று மாதர் சங்கம் சார்பில் சார்பில் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டத் தலைவர் சுபாதேவி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;