மயிலாடுதுறை, டிச.11 – மயிலாடுதுறை அருகே ஏ.வி.சி பொறியியல் கல்லூரி யில் மறுசுழற்சி மற்றும் மறுபயனீடு என்ற தலைப்பில் அறிவியல் செய்முறை கண்காட்சியும், தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியும், ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரு பிரிவுகளில் நடைபெற்றது. மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் 40 செயல் வடிவத்தையும் சீனியர் பிரிவில் 50 செயல் வடிவத்தையும் செய்து விளக்கம் கொடுத்தனர். அதேபோல் ஆங்கில பேச்சுப் போட்டியில் 30 மாணவர்களும் மற்றும் தமிழ் பேச்சுப்போட்டியில் 50 மாணவர்களும் பங்குபெற்று மறுசுழற்சி மற்றும் மறு பயன் பாடு என்ற தலைப்பில் பேசினர். இக்கண்காட்சியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்ப னார்கோவில், சீர்காழி, வடகரை சரகத்தை சார்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு பயன்பெற்றனர். அறிவியல் செய்முறை கண்காட்சியை ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் ஆட்சி மன்ற குழு தலைவர் என்.விஜயரங்கன், செயலர் கி.கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலர் கி. கார்த்தி கேயன், பொருளாளர் என். ஞானசுந்தர் கண்காட்சியில் செயல்வடிவம் செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ் வரவேற்றார். டீன் கல்வி முனைவர் ஜி.பிரதீப் கண்காட்சியின் அவசியம் பற்றி பேசினார். இவ்விழாவில் பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில் முருகன் மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியை கனிமொழி நன்றி கூறினார்.